தமிழ் கன்னியின் மோகம்

தமிழ் கன்னியின் மோகம்
*******************************
கார்முகில் மேகமென கருவண்டு கண்களுண்டு... யாமத்து விடிவெள்ளிமேனியுள்ளும் மின்னியதென்ன...
கொழுமடல் குலைவாழை தண்டென கால்களுண்டு..
காட்டு மல்லி பூத்ததைப் போல்
புன்சிரிப்பு காட்டியதென்ன...
சீரியாடும் கருநாக விடயத்தைப் போல் வஞ்சியென்னை வாட்டியதென்ன...
வண்ணமயில் தோகையைப் போல் அவள் மேனியாடை சொல்லியதென்ன..
செங்கமலி இதழ்களைப் அவள்
உதடிதழ்கள் சிவக்கக் கண்டேன்
கருமேக கூந்தலென்று கவனிப்பார் ஓடிவந்தேன்...
தமிழ் கன்னியின் மோகத்தால்..
தார்மீக படையோடு நடந்து வந்தேன் கன்னியவள் நெஞ்சினுள்ளே.....

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (23-Apr-19, 12:27 pm)
பார்வை : 252

மேலே