என் ஆன்மா பேசுகிறது

# என் ஆன்மா பேசுகிறது #

இந்தியாவில் கடைக்
கோடிமூளையில் பிறந்து...

வறுமையில் வாழ்ந்து
இலவசத்தில் படித்து

என் உடலையே மூலதனமாக்கி
உயிரை அடமானமாக்கி
என் உறவுகளை மறந்து
மனைவி மக்களை பிரிந்து
உணர்வுகளை அடக்கி
ருசி மறந்து

எல்லையில் இரவும்
பகலும்தொல்லைகள்
பலபொறுத்து
என்றாவது ஒரு நாள்
என் கடமை நிறைவேற்றி என் உயிரை மீட்பேன் என்ற நம்பி இருந்த நிலையில்

களம் கண துணிவில்ல
கோழையின் சூழ்ச்சியின் வலையில் சிக்கி

உடல் சிதறி
உயிர் துறந்தேன்

இவை அனைத்தும்
நான் சுவாசமாய் நேசித்த
என் தேசத்திற்காக

எனக்காக என் குடுப்பத்திற்காக
ஒரு பொழுது என் உறவுகளோடு
மனைவி மக்களோடு
மகிழ்ந்து உறவாட திருப்பி தருவிர்களா
என் உயிரை என் தேசமே...

எழுதியவர் : டேவிட் சாமுவேல் ராஜா... (6-May-19, 12:19 pm)
பார்வை : 27

மேலே