தாய்மை
பிறர் பசி ஆற்றலை உணவாய் கொண்டவளே
உன் பசி யார் அறிவார்
என் தேவை நான் அறியுமுன் நீ தெரிந்து போக்கிட
நின் தேவையோ மறந்திடுவாய்
உன்னால் பல குடும்பங்கள் சுழலுதடி என்
கறை படிந்த அச்சாணியே
நீ குலுங்கிச் சிரிப்பதைப் பார்த்தால் போதும்
என் மழலையும் திரும்பிடுமே
புகழின் உச்சியோ மாபெரும் பிழையோ நான்
முதலில் தேடுவது உன் மடியே
வித்திட்ட மரத்தின் வேர் குளிரவைப்பதே
என்றும் எங்கள் ஆனந்தமே