நீரின் மொழி
நீரின் மொழியைத் தெரிந்திடுவாய்
நிலைக்கா தெதுவும் அறிந்திடுவாய்,
பாரிதை விழும்துளி கலந்துவிடும்
பெற்ற வடிவை யிழந்துவிடும்,
சேரும் ஒன்றாய் நீராக
சுழலும் வட்டம் நீர்மேலே,
பாரினில் வாழ்வின் தத்துவமாய்ப்
பார்த்திடு நீர்த்துளி கதையிதையே...!