தேடல்

தேடல்
உடலுக்கு உணவுபோல்
உள்ளத்துக்கு உவகைபோல்
கடலுக்கு நீர்போல்
கடமைக்கு தாய்போல்
மடலுக்கு வரிகள்போல்
சொல்லுக்கு பொருள்போல்
அல்லுக்கு மதிபோல்
என் வாழ்வுக்கொரு கரு காணாது
மூழ்கி மறைந்திடவா பிறந்தேன்
ஆழ்கருத்தை தேடித்தடுமாறி
இளைத்தேன்
பாழ்உடலோ பிணி மூப்பு
கொண்டுவிடும் -பின்
தாள் திறப்பதெப்போது- ஒளி
காண்பதெப்போது கண்ணா

எழுதியவர் : இளவல் (29-Jul-19, 2:03 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 130

மேலே