என்றும் நீ எனக்காணவள்
உன்னை
மீண்டும் மீண்டும்
அள்ளி எனக்குள்
திணித்துக் கொள்கிறேன்...
என் மூச்சு
இதயம்
மூளை
கல்லீரல்
கணையம்
இரத்தநாளங்கள் என அத்தனையிலும்
நீ நிறைந்து போகிறாய்...
நல்லவேளை நீ என்னை துணையென்ற வாழ்க்கைக்குள்ளோ அடைத்துவைக்கவில்லை...
இல்லாதிருந்தால்
நீ கொடுக்கும் நேசத்தையெல்லாம் எங்கே பதுக்கி வைப்பேன்...
குழந்தைக்கு கிடைத்த சாக்லேட் போல தான் நீயும் எனக்கு... கைநிறைய அள்ளி அள்ளி தந்தாலும் ஆசை தீராது...
யாருக்கும் பங்கும் தராது...
ஆயிரம் பெண்களை கடந்திருப்பேன்...
உன்னோடு நிலைகொண்ட
என் காலச்சக்கரம் இன்னும் கூட நேரம் கடத்தாமல் காத்திருக்கிறது...
உன்னோடு யாரையும் ஒப்பிட முடியா உயரத்தில் உனை வைத்திருக்கிறேன்...
எனக்கென்று உனை
தராமல் போனாலும்
#என்றும் நீ எனக்கானவளே...
லவ் யூ பேபி💗