காதலன் காதலி

காதலன்,காதலி.😘

அவன்:- நித்தம் என் கனவில் வந்து தூக்கத்தை கெடுக்கும் அழகு தேவதையே.

அவள்:- உன் நினைவால் வாடுகிறேன், தேடுகிறேன் உன் வரவை.
அவன்:- காலம் நம்மை பிரித்தது, கவலை வேண்டாம் கண்மனியே
விரைவில் வருவேன் உன்னை நோக்க.

அவள்:- தென்றலே, விரைந்து வா, என்னை ஆர தழுவு.

அவன்:- மலரே உன்னுள் இருக்கும் தேனை குடிக்க வண்டாக விரைவில் பறந்து வருவேன்.

அவள்:- நீ கூறும் போதே என் உள்ளம் பூரிக்கிறது. இன்ப வெள்ளம் பெறுகுகிறது.

அவன்:- மாணிக்கமே, மாங்கனியே, மாதுளம் இதழாளே, இன்ப சோலையே, வசந்தத்தின் பிறப்பிடமே, கவலை வேண்டாம், காத்திரு வருவேன், உன்னை வாரி அனைப்பேன்.

அவள்:- கண்ணாளனே, என் காவிய நாயகனே, என் உள்ளம் கவர்ந்த கள்வனே, இந்த வீனை உனக்காகவே, விரைந்து வந்து மீட்டு புதுப்புது ராகமாய். நீ வரும் வரை , நீ தந்த அந்த கடைசி முத்தத்தை
என்னி, என்னி என் நிமிடங்கள் கழியும்.
- பாலு.

எழுதியவர் : பாலு (14-Sep-19, 9:37 am)
சேர்த்தது : balu
Tanglish : kaadhalan kathali
பார்வை : 136

மேலே