அவள் வெறும் ஓவியமில்லை

ஒருமுறை அவளை
பார்த்தால் போதும்
மீண்டும் மீண்டும்
பார்க்கத் தூண்டும்

ஆம்,
ஒரே ஒருமுறைதான்
அவளை ஏறிட்டுப் பார்த்தேன்

வெறும் கற்பனையான
ஓவியம் இல்லை - அவள்
தனித்தன்மை வாய்ந்த
பெண் மெழுகுச்சிலை!

தேன் சொட்டச் சொட்ட
தினம் பேசி மகிழ்வாள்
தொன்மையான
செம்மொழி தமிழை!

ஐயகோ
அவளைக் கண்டால்
என்னிதழ் விரிகின்றதேன்?

அவளைக் காணவில்லையென்றால்
என்னுயிர் கரைகின்றதேன்?

என் வீட்டுக்குள்ளும்
வெள்ளம் புகுந்திட்டதே!

என் மனதுக்குள்ளும்
காதல் நிறைந்திட்டதே!

எழுதியவர் : கிச்சாபாரதி (21-Sep-19, 8:00 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 189

மேலே