அன்பு கணவனுக்கு நன்றி

மனதை கொள்ளை கொண்ட
மன்னவனே
இயல்பாய் வந்த இனியவனே ...
இடையில் வந்த உறவே
இறுதி வரை வரும் உறவே ...
விட்டுக்கொடுத்து போகும் உயிரே
விட்டுக்கொடுக்க முடியா உயிரே ...
இந்த வாழ்க்கை
எத்தனையோ சந்தோஷமும்
ஏராளமான கஷ்டமும்
கொடுத்திருக்கு ...
ஆனால்
உன்னோடு வாழும்போது
கஷ்டமெல்லாம்
அனுபவமாவும்
சந்தோசமெல்லாம்
நினைவாகவும்
மாறுது...
கண்ணீரும் இனிக்கிறது
உன் கைகள் துடைப்பத்தால் ...
பிறர் மேல் நீ காட்டும் பாசம் கண்டு
உன்மேல் நான் கொள்ளும் கோபம்
நம் காதலை அழகாய் சொல்லும் ...
உயிருக்குள் ஓடி வந்த
வார்த்தைகளை தேடி மெல்ல
கவிதைகள் கோடி கொண்டு
என் இதயம் சொல்லும்
அளவில்லா நன்றிகள் உனக்கு...!!!

இதே நெருக்கம்
இதே புரிதல்
இதே காதல்
இதே அன்பு
வாழ்நாள் முழுதும்
தொடரனும் என
இதயத்தின்
வேண்டுதல் இறைவனுக்கு...!!!

எழுதியவர் : (1-Oct-19, 3:06 pm)
பார்வை : 122

மேலே