இயற்கை, நீ

மலர்ச்சோலையை வருடிச்சென்றது தென்றல் மலர்த் தென்றலாய் மாறி மணம் பரப்ப எங்கும்
நீயோ வெறியூட்டும் வதந்திகள் பரப்ப
அது காட்டுத்தீபோல் பரவி நிஜத்தில் தீயாய்
மாறி அழித்து சாம்பலாக்கியதே ஏதுமறியா
நன்மக்களை இயற்கை உன்னைப் பார்த்து சிரிக்க
தென்றல் பரப்பியதோ மலர்களின் சுகந்தம்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Oct-19, 2:47 pm)
பார்வை : 420

மேலே