இயற்கை அருளியது

உங்கள் இதயத்தின் இயக்கம்
உள்ளவரை இரக்கம்
நிலைத்திருக்கட்டும் ,
இரக்கமும், கைகளில் பலமும்
இருப்பதால் தான்
புவி வாழ் ஜீவனெல்லாம்
உயிர் வாழ்கின்றன

கோயிலுக்குக் கொடுப்பதைக்
குறை கூறவில்லை
அதைப்போல
இல்லாத ஏழைகளிடமும்
இரக்கம் காட்டுங்கள்—அது
நம்மையும் இறைவனுக்கு
நிகராக வைக்கும்

ஆன்மாவின் பெருந்தன்மை ,
காட்டும் இரக்கத்தின்
அளவைப் பொருத்தே
அமைகிறது—பிறருக்கு
இரக்கம் காட்டுங்கள்
இறைவனின் இரக்கத்தை
நீங்கள் பெறுவீர்கள்

வன விலங்குகள் கூட
வேற்று இன குட்டிகளைக்
கொன்று தின்னாமல்
கருணை காட்டும் ,
பசித்தாலும் புசிக்காது
இரக்கக் குணம் உயிர்களுக்கு
இயற்கை அருளியது

எழுதியவர் : கோ. கணபதி. (6-Oct-19, 6:39 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 49

மேலே