மழையும் நானும்

மழையும் நானும்

தனிமையின் இனிமையை உணர்த்தும்
இந்த இரவுப்பொழுதே

மயங்கும் மனதில் மண்ணின் மணம் வீசும்
மழைக் காற்றே

வீசிய காற்றில் என் ஜன்னல் வழியே
நுழைந்த சிறு மழைச்சாரலே
என் தேகத்தில் பட்டு வெண்முத்துச் சிதறலாய்
தெரித்ததென்னவோ

என் தலைமுடி ஒவ்வொன்றும் தலையாட்டி
ரசிக்கிறது வீசும் பருவக்காற்றை கண்டு...

என் உடலோடு அள்ளி அணைத்து விட்டேன்
என் போர்வையை
வெட்கத்தில் ஆடையில்லாமல்
அலைபாயும் மழையை கண்டு...

உன் வருகையை நினைத்து
சந்தோஷத்தில் என் மனம்
என்னை அறியாமலேயே தாளமிட்டு ரசிக்கிறது
பற்கள் இரண்டும் உரசிக்கொண்டு...
_கலை

எழுதியவர் : கலைச்செல்வன் (12-Sep-11, 9:04 pm)
Tanglish : mazhaiyum naanum
பார்வை : 283

மேலே