திரு இலட்சுமி நாராயணன் அவர்களுக்கு வாழ்த்து கவி
நீ தாயின் கருவறையில் பிறக்காது
கோயில் கருவறையில் பிறந்தவன்
நீ ராஜ்பவன் தொகுதியின்
மக்கள் குறைகளை
தினம்தோறும் அறிபவன்
நீ ராஜ்பவன் தொகுதி
மக்களுக்கு கிடைத்த பவுன்
நீ அணியும் சட்டைப்பை தான்
சட்டசபை
அது
மக்களுக்காக உழைத்து
ஏணி ஏறி நீ தொட்ட சபை
ஆங்கிலத்தில் உன்னைப் பற்றி
ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால்
நீ லையர் அல்ல லாயர்
நீ பாற்கடலைக் கடலைக் கடைந்து
பள்ளிகொண்ட நாராயணன் அல்ல
பிள்ளைகளுக்கு நூற்கடலை கடைந்து பள்ளி கண்ட நாராயணன்
உன் முகத்தில்
அனைவருக்காகவும்
பூக்கும் பூ சிரிப்பு
அதுதான் உன் தனிச்சிறப்பு
சட்டமன்ற உறுப்பினர்களில்
நீ மட்டும் சா.ம. உ
சா.ம. உ என்றால்
சாதாரண மக்களின் உறுப்பினர்
என்று பொருள்
தீயவர்களுக்கும் நீ தூயவன்
நாராயணன் எனும் பெயரில்
அவதரித்த மாயவன்
நீ ஐந்தரை அடி அன்பு சிலை
ரவிசங்கரே கற்கவேண்டும்
உன்னிடம் வாழும் பண்புகளை
ஏழை மக்களுக்கு
அள்ளிக் கொடுப்பதால் நீ கர்ணன்
புதுவையில் நடந்த
மகாபாரதப்
போரில்
மாபெரும் மக்கள் தலைவர் திரு.கண்ணன் அவர்களையே
வென்ற கர்ணன்
அள்ளிக் கொடுப்பதில் நீ பாரி
உன் மனம் இனிக்கின்ற சக்கரை உன் நெஞ்சில் இருக்கும் பார் ஈ
உன் மீது எப்போதும்
அமர்ந்திருக்கும் ஓர் ஈ
ஏனென்றால் நீ ஓரி
கவிஞர்களை ஊக்குவிப்பதில்
நீ பாண்டிய மன்னன்
கவிஞர்கள் மனதார வாழ்த்துகிறோம்
நீ ஒரு நாள் ஆக வேண்டும்
பாண்டியின் மன்னன்