டிசம்பர் இருபத்தாறு பாயட்டும் மகிழ்ச்சி ஆறு

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட
குதூகல காலத்தில்
பிறந்து... வளர்ந்தவன்
நண்பன் *மரியதாஸ் ஆனந்த்...*
உனக்கு எனது இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

இவன் மனசு விசாலம்...
எப்போதும் முகத்தில் புன்னகை
அது இவன் விலாசம்...

மனதுக்கு பிடித்தது
மாறுகிறது
அவ்வப்போது...

மாதங்களில்
மார்கழி...'தை' எனும்
ஓரெழுத்து மாதம்
ஒய்யாரமாய்
உதிக்கும் வரை...

ஊர்களில் சென்னை
மலையழகும்
கடலழகும் வயலழகும்
வாய்த்த திருநெல்வேலி
மாவட்டம் செல்லும் வரை...

மலர்களில்
ரோஜா... மனம்
மயக்கிடும் மல்லிகை
கிடைக்கும் வரை...

கனிகளில்
மாதுளை... மாம்பழம்
வித விதமாய்
ருசிக்கும் வரை...

கோடையில்
கொடைக்கானல்
குற்றால சீசன்
வரும் வரை...

மாறாதவைகளின்
பட்டியலில்
எதுவுமில்லை
*மரியதாஸ் ஆனந்த்*
போன்ற நட்புக்கள்
மற்றும் உறவுகளின்
மீதுள்ள அன்பைத் தவிர...

*மரியதாஸ் ஆனந்த்...*
தெளிந்த நீரோடை இவன்...
படிக்கும்போதே குவாலிட்டி...
குவான்டிட்டி ஸேஃப்ட்டி.. தெரிந்தவன்..
அதனால்தான் என்னவோ
என்ஜினியரிங்.. புரக்யூர்மென்..
கன்ஸ்ட்ரக்ஷன் இவனால்
அழகு பெறுகிறது...
வளைகுடா நாட்டு
மல்ட்டி நேஷன் கம்பெனிகளில்...

*மரியதாஸுக்கு..*
கல்லூரி விடுதியில்
சுமாராய்ப் படிக்கும் நண்பர்களை
விடிய விடிய நடக்கும்
ரம்மி ஆட்டத்தில்
ஜெயிக்கவும் தெரியும்...
விடிய விடிய படித்து
கல்லூரி பருவத் தேர்வுகளில்
நன்றாய்ப் படிப்பவர்களைச்
ஜெயிக்கவும் தெரியும்...

*மரியதாஸ்* ... இந்த சிற்பம்
தன்னைச் செதுக்கிய
சிற்பிகளோடு தானும் சேர்ந்து
தன்னை அழகாய்ச்
செதுக்கிக் கொண்டது
எல்லோரும் விரும்பும் வண்ணம்...

*மரியதாஸ் ஆனந்த்...*
ஆனந்தமயமான
பிறந்தநாள் நல்
வாழ்த்துக்கள்!

இன்று டிசம்பர் இருபத்தாறு
என்றும் பாயட்டும்
உன் வாழ்வில் மகிழ்ச்சி ஆறு!
வாழ்க பல்லாண்டு!!
👍🎂🙋🏻‍♂🌺🌷🌹🙏😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (26-Dec-19, 12:26 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 215

மேலே