கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ்...
கேக்குகளின் இனிமையிலும்..
புத்தாடைகளின் பளபளப்பிலும்..
ஸ்தோத்திரங்களின் உச்சரிப்பிலும்..
விழாக்கால சந்திப்புகளிலும்..
வாழ்த்துக்கள் பரிமாறலிலும்..
ஊரெல்லாம் கொண்டாட்டம்..
உலகமெல்லாம் சந்தோசம்...

யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே...
புத்தாண்டு வரும் பின்னே
கிறிஸ்துமஸ் மணியோசை
வரும் முன்னே...

இயேசுநாதர் வல்லவர்..
மிக நல்லவர்.. ரட்சிப்பவர்..
மனிதர்களுக்கு சிறகுகள் தர
சிலுவை சுமந்தவர்...

துன்பங்கள் அகற்றி
இன்பமாய் வாழ
இயேசுபிரான் சொன்ன
வழிகள் பைபிளாயிற்று
சமாதானம் உருவாயிற்று...

அழகிய குடில்கள்...
கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்
பாடல்கள்... பரிசுகள்...
மார்கழிப்பனியின் இதம்
கிறிஸ்துமஸ் மரம்...
சொர்க்கம் இன்று
மண்ணில் வந்தது... அதில்
வானமும் வசந்தமும்
வசப்படுகிறது...

பூமியில் இங்கு...
உற்சாக பொழுதுகளால்
உலகம் வலிமை பெறுகிறது...
சந்தோச தருணங்களால்
சமாதானம் ஓங்குகிறது...

இயேசுநாதருக்கு நன்றிகள்...
நண்பர்களுக்கு இனிய
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

நட்புடன்...
அன்பன். ஆர். சுந்தரராஜன்.
💐🌹🙏👍👏😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (25-Dec-19, 6:47 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 82

மேலே