என் தேவதை உறங்குகிறாள்
உடனே விடியாமல்
இரு இரவே நீ
வெளிச்சத் தடையை
அன்பு நண்பா
இன்று மட்டும் எனக்காக
விதித்தால் என்ன
நீ பொழுதானால் எனக்கு
யாவும் இங்கு பழுதாகும்
என் தேவதை உறங்கிக்
கொண்டிருக்கிறாள்
நீ இருள் சிதையாதே
என் பொருள் சிதையும்
நீ குலையாதே
அவள் கலைவாளடா
அவள் தூங்கும் போது
எத்தனை அழகு தெரியுமா ?
கருங்காலிக் கருவாயா
சினேகிதா
நீயும் காதலித்துப் பார்
உன் காதலியை
ஒளிவாய் நின்று
ரசித்துப் பார்
அப்போது தான்
ஒரு காதலனின்
உண்மையான
மனவோட்டம்
உனக்கும் புரியும்
அஷ்ரப் அலி