எல்லாமும் எல்லோருக்கும்

சுற்றும் கோள்களுக்கு சூத்திரம் உண்டோ
சுயமாய் சுழன்றிட எரிபொருள் ஏது
எவ்வகை இயக்கத்தில் இவைகளின் இயங்குது
இடம் வலம் என்று இயங்குவது எப்படி
சுழலும் கோள்களில் சூழ்நிலை மாறுவதென்ன
ஓர் நிலையில் சுழல்வன ஒன்றைவொன்று நெருங்காதோ
எவ்வகை பொருளும் சிதைவது எங்ஙனம்
நெருப்பின் சூடதை நீர்க் கொள்வது எவ்விதம்
நீரின் எழுச்சியால் நெருப்பணைவது பிரம்மிப்பு
காற்றது உறைந்தால் கன நேரத்தில் உயிர்கள் மாயும்
- - - - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (14-Jan-20, 8:53 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : ellamum ellorukkum
பார்வை : 107

மேலே