தமிழ்ச் சண்டாளர்கள்

தமிழ்ச் சண்டாளர்

வர்க உலகம் பணக்கார வர்கமாம்
தர்கம்செய் வார்ஏழை யும்மறைய -- வர்கமிலா
நற்றமிழ்தே சக்கொடி யிங்கேப் பறக்குமாம்
கற்ற பகுத்தறிவு பேச்சு

இன்று யூ டியூபில் பகுத்தறிவு வாதிகள் சிலர் பேசுகிறார்கள் பணக்கார மற்றும் ஏழை என்ற
வர்கமும் மேல்சாதி கீழ் சாதி என்ற பாகுபாடு ஒழிந்தால் தமிழ் தேசியம் வளருமாம்,. என்று
தமிழ்நாட்டில் கழக ஆட்சி என்று வந்ததோ அன்றே சாதிப் பாகுபாடுகள் ஒழிந்து போனது.
40 வருடங்களுக்கும் மேலாக பேசிப் பேசி சாதி பாகுபாடு உண்மையில் இல்லாப் போனது.
மற்ற சாதியினர் மொத்தத்தில் அதிகம் இருந்தாலும் தனியாக இகுறைந்த அளவேயான
தாழ்த்தப்பட்டவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாக திகழ்வது கண்கூடான உண்மை..
சாதி ஒழிப்பை சொல்லி எதையெதையோ கூட்டம் போட்டு தமிழ் தேசியத்திற்கு வந்துள்ளார்கள்.
புதிதாக ஆசீவகம் மதம் உண்மை மதம் என்று கழகத்தின் ராஜா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இனி இவர்களிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. இவர்கள் தாமாக ஏதேதோ உளறுகிறார்கள்
தமிழர் என்றும் கலாச்சாரங் களை மறக்க மாட்டார்கள். சேர நாட்டன் சோழநாட்டான்,
பாண்டி நாட்டான் காஞ்சி நாட்டான் உண்டு. தமிழ் நாட்டான் என்று 1968 க்குப் பிறகு:
தான் வழங்கப்பட்டுபெயர் சூட்டிக் கொண்டான் என்பதை ஞாபகத்தில் வைத்துக்
கொள்ளுங்கள். உண்மை உண்மை. பகுத்தறிவு என்று சொல்லிக்கொள் பவன் தமிழனை
ஏமாற்றுபவனே.




சாதி பலயிங் கதொழிய ஏதுசாதி
சாதி தமிழ்தேசி யம்வளர்க்கா -- சாதனமாம்
சாதி ஒழிய பகுத்தறிவு வாதிகோஷம்
சாதனை செய்வார் களாம்

அன்று தமிழ்மறவர் சேரசோழப் பாண்டி
வென்ற தமிழர் தமிழரோ -- அன்றன்று
இன்னும் மதராஸ்தெற் கிந்தியா என்றார்
இன்றே தமிழ்நாடென் றார்

சாதி பிடித்து தொங்கி சாப்பிடும்
வாதிகள் சந்தர்ப வாதி களிவர்
கவர்ச்சி பேச்சால் தாழ்வுமனத் தாரை
கவர்ந்திழுக்கும் அர்த நாரி நரிகளாம்
தொன்று தொட்டு தொடரும் மிச்சாதி
தொல்சரித் திரம்பேசும் சாதியை
வெல்லு வதேதிந்த வாய்பேசும் வீரருமே



முப்பது வருடம் மூத்தாள் சேர்த்தாள்
எப்பக்கமும் சொத்து கணக்கில்லை ஏராளம்
எப்பாடும் படாதிங்கு பங்கிட்டுக் கொள்ளை
தன்மான மில்லா சன்மானம் பெறுகிறார்
தன்னின மக்களின் புத்தி பேதலிக்க
பொன்மா னைக்காட் டுகிறார்
சண்டா ளச்சிகண் டியின்மறு பிறவிகளே.

எழுதியவர் : பழனிராஜன் (27-Mar-20, 5:47 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 499

மேலே