எங்கே எனது கவிதை
எங்கே எனது கவிதை!!!!
என்
இதய வீடு!!
தீப்பற்றி எரிகின்றதே!!
கண்ணீர்
கொண்டு அனைத்து
தேடுகின்றேன்!!
எங்கே எனது கவிதை!!!!
கனவின்
கற்பனையை பிழிந்தெடுத்து!!!!
உன் நினைவால் நிரப்பப்பட்ட!!
எழுதுகோலால்!!
என் இதயம் எழுதிய
கவிதை உன்னில்!!!
என் இதயத்தோடு தொலைந்ததே!!!
எங்கே எனது கவிதை!!!!
காதலே!
கவிதை மீதேறி!!
காகிதத்தில் புறப்பட்டாயே!!!
கசங்கிய
காகிதத்தில் நீ மட்டும்!!
காயம்பட்டு கிடக்கின்றாய்!!!!
எங்கே எனது கவிதை!!!!
கவிதையை
ஈன்றது நான்!!!
கருவானது உன்னால் தானே!!
ஒன்றிரண்டல்ல!!!!
கவிதைகள் அனைத்தையும்!!!
உன் கோபத்தில் தொலைத்து
தேடுகின்றேன்!!!
எங்கே எனது கவிதை!!!
பழைய
மனதை வைத்து!!!
தொலைத்த கவிதையை!!!!
மீண்டும் எழுத ஆசைதான்!!
நிலவில்லாத இருண்ட வானில்!
சாயம் போன பூவை வைத்து!
என்ன எழுத??
மீண்டும் தேடுகின்றேன்!!!!
எங்கே எனது கவிதை!!
நிலவில்
உன்னை தேரோட்டி
சென்ற கவிதை எங்கே!!!
விண்மீனை
உன் நெற்றி பொட்டாய்
சூட்டிய கவிதை எங்கே!!!
உன் நாவில்
கற்கண்டாய் இனித்த
கடைசி கவிதை!!!
எங்கே?? எனது கவிதை!!!
காதலின்
மிச்சம் கண்ணீர்!!
துளிகளாய்!!! இருப்பதனால்,
கண் தானம் செய்ய
மனமில்லாமல்!!!
உனக்கே!!!!
கவிதை தானம் செய்ய
தேடுகின்றேன்!!!!
எங்கே எனது கவிதை!!!
--- சக்திராசன்