நடமாடும் தெய்வங்கள் 🙏🏽
நடமாடும் தெய்வங்கள் 🙏🏽
இக்கட்டான சூழ்நிலையில்
குடும்பத்தாரே விலகி இருக்கும் நிலையில்
அரவனைப்போடும், அன்போடும்,
தன் உயிரை பணயம் வைத்து நோய் பாதித்தவர்களை தொட்டு வைத்தியம் பார்க்கும்
மருத்துவர்கள்
மருத்துவர்கள் அல்ல நடமாடும் தெய்வங்கள்.
மூன்று வேளை மருந்தளித்து
நோயாளிகளுக்கு உணவும், அன்பும், அரவனைப்பும் தரும்
செவிலியர்கள் பெற்ற தாயை விட ஒரு படி மேல்.
இந்த மாதிரி மிக மோசமான சூழ்நிலையிலும் தினம்
குப்பை அள்ளும் துப்பரவு பணியாளர்கள்
மனிதர்கள் அல்ல
கடவுளின் பிள்ளைகள்.
ஊரடங்கு உத்தரவு அரசாங்கம் பிறப்பித்தும்
அதை பொருட்படுத்தாமல்
ஊர் சுற்றும் சில நபர்களை காலில் விழுந்து தயவு செய்து
வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லும் காவலர்கள்
காவலர்கள் அல்ல ஊர் காக்கும்
காவல் தெய்வங்கள்.
அரசாங்கம் சொல்படி நடப்போம்
ஊருடன் ஒத்து போவோம்
நல்ல எண்ணங்களை வளர்ப்போம்
நோயை நாட்டை விட்டு விரட்டுவோம்.
- பாலு.