தருணம் பார்த்து

*சத்தமின்றி* பூக்கள்

மெல்ல பூக்கும்

வாசம் வீசி

இருக்கும் இடம்

காட்டும்...



*கடல்* மீது பயணம் 

வெகுதூரம் தருணம்,

 தாகம் ?

நீரின் அருமை புரியும்...



*இளங்காற்று*

மரத்தோடு

இணையாது

உயிர்கள்  எங்கே

வாழும்?



*மழை* பெய்யும் நேரம்

குளம் இல்லா ஊரும்

பயன் என்ன ஆகும்?



*பொருள்* சேர்த்து

வைத்து

நீ மட்டும் உலகில்

நிலை என்ன ஆகும் ?


பிறர்நலம் போற்ற

நினைத்தாலே போதும்

*இறைவன்* அருள்

சேரும்!

எழுதியவர் : த பசுபதி (18-Apr-20, 8:16 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : tharunam paarthu
பார்வை : 82

மேலே