நிலவொளியில்

நிலவொளியில்,
இரவின் இசைவில்,
நான் காண்பது ..
நதி நீரின் ஓட்டமா?
இல்லை என்
எண்ணங்களின் ஓட்டமா ?!

அங்கங்கே மின்னும் ஓட்டம்,
இருள் கலந்த ஓட்டம்!
நிசப்தத்தின் ஒலியில்-
எனக்கு மட்டுமே கேட்கும் கானம்!

எண்ணங்கள் கவி வரிகளாய்,
மனம் இசை அமைக்க,
உணர்வுகள் இசைக்கருவிகளாய்-
பாடகன் யாரோ நானறியேன்!

எழுதியவர் : மகா ! (7-May-20, 10:03 pm)
சேர்த்தது : mahakrish
Tanglish : nilavoliyil
பார்வை : 147

மேலே