💕 அன்பு மகளுக்கு 💕

அன்பு மகளுக்கு...

***
💕 என் உயிரணுவில் உதித்த தேவதையே...

உன்னை கையில் ஏந்திய முதல் நாள்
பௌர்ணமி நிலவின் அழகை கண்டேன்...
அப்பா என்ற முதல் அழைப்பில் - ஆனந்த
கண்ணீரின் அர்த்தம் கண்டேன்...

அன்பின் அடைமழை அவள்
சிணுங்கலுக்கு சொந்தக்காரி அவள்
பிடிவாதத்தால் பிடித்ததை சாதிப்பவள்
என்னுள் உள்ள தாய்மையை உணர்த்தியவள்..

நான் உன்னை விட்டு கடல் தாண்டி இருந்தாலும்
உன் மழலை பேச்சில் - மனம் மறந்து
நெகிழ்ந்து போகிறேன்...

உறக்கத்தில் உன் அழகை காண
என் உறக்கம் மறந்தேன்...
உன் எச்சில் சாதம் உண்ட போது
அமிர்தத்தின் சுவை அறிந்தேன்...

அவள் சிரிக்கையில் நானும் சிரித்து
அழுகையில் நானும் அழுது
ஆகிவிட்டேன் சிறு குழந்தையாக... 💕
***

எழுதியவர் : வீரபாண்டியன் (8-Jun-20, 8:08 am)
சேர்த்தது : வீரா
பார்வை : 285

மேலே