நீயின்றிஉன் நினைவின்றி ஒரு கவிதை 💕💕

@@ ஒரு கவிதை
எழுதப் போகிறேன்
நீயின்றி - உன்
நினைவின்றி

பேனா மையில் - உன்
கண் மையையும்
கலந்துவிட்டேனா என்ன.?
உன்னைத்தவிர
ஒன்றையும்
எழுத மறுக்கிறது.!

வேர் பிடித்துக் கொண்டதோ..?
வார்த்தைகளின் கால்களில்.
ஆரம்ப புள்ளியிலே...
அடம் பிடித்து நிற்கிறது.

முயன்று பார்த்து...
மூச்சு முட்டி...
முடியாமல் எழும்,
பெருமுச்சின் ஒலியில்...
பட்டென கலைகிறது ஏகாந்தம்.

காற்று தலையசைத்து
கைகட்டி நிற்கிறது
பின்...
கடை வாசல் வழியாக - அது
வெளியேறிச் செல்ல...
அந்த...
திறந்த வழியில்,
மறுபடியும்...
நுழைகிறது - உன்
நினைவலைகள்.!!

மூளை முழுவதும்,
முகாமிட்டுக் கொண்டு...
நியூரான்களுக்கு பதிலாக
நீதான் இருக்கிறாயா.

உனக்கு தெரியுமா..?
உடனிருப்பவர்களும், நண்பர்களும்,
கேலி செய்கிறார்கள் என்னை.

சமூக கவிதையெல்லாம்
எழுத மாட்டாயா என
சங்கடப் பட வைக்கும் நண்பன் ஒருவன்.!!
வேறு வேலை இல்லையா என
வியக்கும் தோழியொருத்தி!!

சரி விடு.!!
இந்த நாள் போகட்டும்.!!

மறுபடியும் நாளை...

@@ ஒரு கவிதை
எழுதப் போகிறேன்
நீயின்றி - உன்
நினைவின்றி.!!!

//-//-//-//-//

எழுதியவர் : மருத கருப்பு (26-Jun-20, 10:58 pm)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 284

மேலே