பார்வையில் வீணை நாதம் இசைத்தாள்
விரிந்தலர்ந்த உந்தன் கமலக் கண்களால்
எனைப்பார்த்தாய் இமைகள் சிமிட்டிட அது
என்னுள்ளத்தில் பாய்ந்ததே ஒலி அலையாய்
அங்கு என் இதயத்தை நிரப்பியதே வீணை
நாதம் இசைத்து காதல் கீதம் இசைத்து
இதமாய் எனக்கது காதல் தாலாட்டு ஆனது
என்னை மறந்து கொஞ்சம் நான் துயில் கொள்ள