தன்னிலை உணர்ந்துகொள்

ஒளிரும் நிலா குளிரும் நதியிலே 
மிதந்ததே!
தன்னை கண்டு 
பாதி விண்ணீலோ  மீதி நீரிலொயென 
கலங்கியதே!

இரவின் இருள் தன்னிலும் விழுவதை 
மறந்ததே !
நாட்கள் நகர்ந்தது
தன் வாழ்க்கை  வளர்ந்து தேய்ந்து மறைந்து தோன்றுவதென 
புரிந்ததே!  

நிலவே! 
விழி மூடி
பார்த்ததை எண்ணி பார் 
தோற்றத்தில் மாற்றம் உலகிற்க்கு மட்டுமேயென 
தெளிந்து தன்னிலை உணர்ந்துகொள்!

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து  (3-Aug-20, 9:48 pm)
பார்வை : 53

மேலே