ந , ண ன எங்கெல்லாம் வரும் -- ஒரு விளக்கம்
தமிழில் னகரம் , ணகரம் , நகரம் எங்கெல்லாம் வரும் ? எழுத்து பிழை இல்லாமல் எழுதிட சில எளிய விளக்கங்கள் இதோ .
மூன்று சுழி ண , ரெண்டு சுழி ன மற்றும் நகரம் என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு .
ண இதன் பெயர் டண்ணகரம்
ன இதன் பெயர் றன்னகரம்
ந் இதன் பெயர் தந் நகரம் என்பதே சரி .
மண்டபம் , கொண்டாட்டம் - என எங்கெல்லாம் மூன்று சுழி ணகர ஒற்றெழுத்து வருகிறதோ அதையடுத்து வரும் உயிர்மெய் ட வர்க்க எழுத்துக்களாகத்தான் இருக்கும் . இதனால் இதற்கு டண்ணகரம் என்று பெயர் .
தென்றல் , சென்றான் -- என எங்கெல்லாம் இந்த இரண்டு சுழி ன கர ஒற்றெழுத்து வருகிறதோ அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும் . இதான் இதற்கு றன்னகரம் என்று பெயர் .
இது இரண்டும் என்றுமே எங்குமே மாறி வராது .
நகரம் என்பதை த ந்நகரம் என்று தான் அழைக்க வேண்டும் . ந் எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே . எடுத்துக்காட்டு பந்து , வெந்தயம் , மந்தை , சந்தை ,கந்தை , விந்தை ,
மேற்கண்ட விளக்கம் எளிமையாக பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .
நன்றி !