இயற்கையின் மீட்சி
கிளைகளிலிருந்து இலைகள் உதிர்வதால்
மரம் ஒருபோதும் ஊனமாவதில்லை.....
புதிய இலைகள் துளிர்த்திடும்
பசுமை கூடி மிளிர்ந்திடும்
நதியின் பாதை
நாற்பக்கம் பிரிந்தும்
ஊற்றுக்கு ஏதும் பங்கமில்லை
தடையின்றி சுரந்திடும்
தன்வழி ஓடி ஊர்செழிக்கும்
மதிமுகம் தேய்வதால்
பொலிவு குறைவதில்லை
வளர்பிறையில் முழுமை பெறும்
முழுமதியாய் ஒளி பரவும்
உதிர்ந்தாலும் பிரிந்தாலும்
கலைந்தாலும் கரைந்தாலும்
தேய்ந்தாலும் வளர்ந்தாலும்
இயல்புகள் திரிவதில்லை
இதுவே
இயற்கையின் மீட்சி
இறையின் மாட்சி