இறுதியில் சாம்பலென்று

கொட்டிக் கிடந்தன
சாம்பல் குவியலாக
இடுகாட்டில் !

அழைத்துக் கூறினேன்
அங்கிருந்த காவலாளியை
அப்புறப்படுத்த !

அவனும் உரைத்தான்
அவனின் மொழியில்
அதிர்ந்து போனேன் !

இருக்கும் போதுதான்
இவர்களுக்குள் மோதல்
இன்றோ ஒன்றிவிட்டனர் !

கலந்து உள்ளனரிங்கே
களைந்த சாதிவெறியுடன்
கலந்த இதயங்களாய் !

இணையட்டும் இதிலாவது
இதுதான் வாழ்வென்று
இறுதியில் சாம்பலென்று !

எரிந்துப் போகுது
எலும்பும் தோலும்
எரியாதது சாதிமதம்!

உள்ளத்தில் கொள்க
மனிதஇனம் ஒன்றேயென
உணருங்கள் இனியேனும் !

எரியுங்கள் பிரிவினையை
புரியுங்கள் வாழ்வியலை
அழியுங்கள் பேதங்களை !


பழனி குமார்
15.10.2020

எழுதியவர் : பழனி குமார் (16-Oct-20, 7:11 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 78

மேலே