வசந்தமாய் வந்தவள் நீதான் 555

***வசந்தமாய் வந்தவள் நீதான் 555 ***


என்னுயிரே...


என் மௌனம் உன்னை
பாதிக்கவில்லை ஒரு போதும்...

இத்தனை நாள் நான் உனக்கு உரியவன்
என்றே நினைத்திருந்தேன்...

காலம் கடந்தே
உணர்கிறேனடி நான்...

உனக்கு நான்
முக்கியம் இல்லை என்று...

உன் மௌனம்
என்னை கொள்வதால்...

உன்னை நான்
தேடிதேடி வருகிறேன்...

உன் ஏளன பார்வையில் நான்
நெருப்பின் பக்கத்தில் நிற்கிறேன்...

ஒவ்வொரு கணமும்
துடிப்பது தெரியவில்லையா...

காயப்படுத்தி கொண்டே இருக்கிறாய்
என்னை நீ ஏனடி பெண்ணே...

என் உள்ளத்தில் பாய்ந்த
உன் வார்த்தை முட்களை...

நீயே வந்து
எடுத்து செல்லடி...

வறண்ட நிலமான
என் இதயத்தில்...

வசந்தமாய்
வந்தவள் நீதான்...

இன்று வாடவைத்து
சென்றது ஏனடி என்னை...

நீ அழகு
சிலை என்றேன் அன்று...

அதனால்தான் நீ மௌனம்
கலைக்காமல் இருக்கிறாயோ...

என் உளறல்களும்
உனக்கு கேட்கவில்லையோ...

என் ப்ரியமானவளே.....


முதல் பூ பெ.மணி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (20-Oct-20, 9:55 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 805

மேலே