இதுதான் காதலா

இருகூட்டில் வாழ்ந்திடும் இருஇதயமும்
பல்லிளிக்கும் பங்குனி வெயிலிலே
ஒருசேர ஒரு குடைக்குள் மறைந்துகிடந்தது
உலகின் இரண்டாம் நீண்ட கடற்கரையாம்
மெரினாவில்

நேற்று பெய்த மழையில் முளைத்த
காளான் போல
அடிக்கு ஒரு குடையாய்
காதலர்கள் என்று சொல்லி லயித்திருக்க
சுற்றமும் சுற்றிலும் மறந்து
கணநேரமும் வீணடிக்காமல்
காரியமே கண்ணாய் ஜோடிகள் கிடக்க

அங்கே மடியிலே கிடப்பவனுக்கோ
மடியைவிட்டு எழ மனதுமில்லை
முகங்கள் எங்கோ புதைந்திருக்க
கைகள் மட்டுமே பேசிக்கொள்ள
தேவைகள் மட்டுமே நிறைந்த அந்த உறவு
அங்கே காதலெனும் முகமூடி அணிந்து

காதல் அங்கும் மலர்ந்துகொண்டு இருந்தது
மண்ணில் கிடந்த மீன் துண்டை
பகிர்ந்துண்ட காக்கைகளுக்கிடையே
- இணையத்தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (30-Nov-20, 6:46 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : ithuthaan kaathalaa
பார்வை : 377

மேலே