அன்னையின் அங்கீகாரம்

ஓர் பிள்ளையின் முன்னேற்றம்
அன்னையின் அங்கீகாரம்
அடையாளம் சொல்லும்.

வளரும் பிள்ளையோ
படரும் கொடிபோல்;
அன்பு என்னும் கொம்பில் சுற்றி,
அறிவு என்னும் வழியில் படரச் செய்தல்
அன்னைக்கே உரிதான ஒன்றாய்
அறநெறியின் சிறப்பு.

இல்லையேல்
வழிமாரும் கொடியாய்,
வந்து கூடும் மேகங்களாய்,
நிலை மாறி கலைந்து விட
தடுமாறும் நிலை காணும்
பின் வரும் செயலினை கண்டு
பிழையாய் ஐயம் கொள்ளும்.
- ஸ்ரீ ஜனகா.

எழுதியவர் : ஸ்ரீ ஜனகா (7-Feb-21, 11:09 pm)
சேர்த்தது : ஸ்ரீ ஜனகா
பார்வை : 842

மேலே