மியாவ்

சுவரிலிருந்து குதித்து
வீட்டுக்குள் விரைந்தோடி
மறைவிடம் தேடித்தேடி
அலுப்புற்று தவித்து

மேசை நாற்காலியில்
கால் வழுக்கி புரண்டு
இங்க் பாட்டிலில் மோதி
புது நிறமுற்று வியந்து

தரையில் தாழ்ந்து
கால் பரத்தி நிமிர்ந்து
தன் நெஞ்செல்லாம் நக்கி
என்னை அசுரனாய்
கூர்ந்து நோக்கியபின்
வாசலில் மறைந்தோடும்
அந்தப்பூனை...

வழி தெரியாது
வாசல் தெரியாது
சுற்றி சுற்றி அலைகிறது
மனதில்...
நானறியா அறையொன்றில்.

பூனையின் மனதில் நானும்
என் மனதில் பூனையுமாய்
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
பூட்டிய அறைகளுக்குள்.

எழுதியவர் : ஸ்பரிசன் (9-Feb-21, 2:47 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 85

மேலே