இறப்பு தழுவிவிட்டால்

கலித்தாழிசைப் பா

முதுமையில் ஏன் இயக்கம் முடங்குகிறது
நடுக்கமும் குழறலும் மங்கலும்
அல்லும் பகலும் அல்லல்படுத்த
உணவும் நீரும் ஓக்காளிக்க
எல்லாம் இங்கு வெறுமையாய்
எங்கோ தனிமையில் சிக்கியதாய்
இடம் வலம் என்பதும் மறதியில்
பணமும் நகையும் பகையாளியாய்
மக்கள் மனைவி சொந்தங்களும்
எல்லோரும் இப்பொழுது எதிரியாய்
காற்றின் தீண்டலும் வலியையாக்க
உறக்கம் என்பதும் விலகியபடியே
எதை நான் கேட்டாலும்
எல்லோருக்கும் எரிச்சலாய்
நண்பர்கள் கூட கடமைக்கென
நலன் விசாரித்து நகர்ந்தபடி
விரைவில் இறப்பு தழுவிவிட்டால்
இவ்வுலக தொடர்பு அறும் நாளிலே சுகமே.
¬¬¬¬¬¬¬¬¬ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Mar-21, 5:42 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 47

மேலே