நிலா பெண்ணே
இதோ !
பாய் விரித்து படுத்து
விட்டேன்!
விழி முடி விண்ணுலகம்
புறப்பட சித்தமாகி
விட்டேன்!
என் உலகம் மொத்தமும்
உயிர் பெற
தொடங்குகிறது இந்த காரிருள் வேளையில்!
பால்வெளி திரள் முழுவதும்
நீ அருந்த பால் அளித்து
வரவேற்க தயாராக நிற்கிறது!
ஆனால்
நீயோ வானத்தில்
ஊரடங்கு சட்டம் போட்டதாய் மேக தலையனைக்குள் முகம் மறைத்து காட்ட மறுக்கிறாய்!
உன்னை கானாது என் விழிகள் கனவில் எழாது!
சிறிது நேரமாவது உன் நீள் வட்டமுகம் காட்டி என் கனவை வண்ணமாய் மாற்றி விடு!
என் ஆசை நிலா பெண்ணே!