ஒருதலைக்காதல் ஓயாது சுமக்கும் காதல்
ஒருதலைக்காதல் ஓயாது சுமக்கும் காதல்
ஒருதலைக்காதல் ஓயாது சுமக்கும் காதல்
தேய்ந்த நிலவாய் தவிக்கும் காதல்.
கண்ணே கண்ணே காணாதே
காதல் வலியில் தூங்காதே;
பெண்ணே பெண்ணே பிடிவாதம் பிடிக்காதே;
பெண்ணே நெருங்காதே என் ஆசைக்கனவுகளை நொருக்காதே;
உன்னை உன்னை காதல் செய்ய வில்லை
உன் இதயத்தைக்
காதல் செய்தேன்.
உன்னைத் தொடமுடியவில்லை என்றுதான்
உனக்கு தெரியாது
உன் விழிகளைத் தொட்டுவிட்டேன்.
உன்னை உன்னை சுமக்கவில்லை
உன் நினைவுகளை சுமக்க தடைபோடுவதேன் .
உன்னிடம் நான் பேச வில்லையே.
என்னுள் உன்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கின்றேன்,
உன்கரம் கோர்த்து நடக்கவில்லையே ;
ஆனால் கற்பனையில் சிரம் சாந்து கிடக்கின்றேன்,
சினம் எதற்கு;
கனவில் கனாக்காணவும் தடையா!
காதலென்ன கண்ணீர் சுமையா!
காதலிக்க நீபோட்ட 144 தடையா!
முழுமதியை தொட முடியாது,
பார்கத்தான் ரசிக்கமுடியும்,
மூட்டிய நெருப்பை அணைக்கமுடியாது ,
இதம் தேடத்தான் அருகில் வரமுடியும்.
முழுமதியே,
மூட்டிய நெருப்பே ! முடக்காதே என்னை.
முட்டி போதினால் தான் அலை;
தட்டி எழுப்பினால்தான் ஓசை;
முட்டட்டும் தட்டட்டும்.
முரட்டுப் பிடிவாதம் எதற்கு,
பாவையே பார்த்தால் போதும்
பசி ஆறிவிடும் ,
ருசிபார்கத் தேவையில்லை,
ரசிகனாய் இருப்பேன்,
ரகசியமாய்ப்பார்ப்பேன்,
ஒரு தலைக்காதலது ஓயாமல் தேடுது,
ஒரு தலைக்காதலது ஓட்டம் போட்டு பார்க்குது.
ஒருதலைக்காதலது மூட்டம் போட்டு பார்க்குது,
காணாமல்போன கனவது ;
கனவில்வாழுது;
காதலது கண்ணீரில் துடிக்குது;
ஒருதலைக்காதலது ஓயாது ஒலிக்குது;
சீண்டாத காதலது உன்னிடம் சினத்தீயை மூட்டுது,
சிதையாத காதலது;
என்னைச் சிறைச்சேதம் செய்தது.