ஒரு பக்கம் கதை
ஒரு சின்ன பையன் தன் வகுப்பு தோழனுடன் பள்ளிக்கு சென்று கொன்றிருந்தனர்.அப்போது அந்த வழியாக ஒரு இரண்டு சக்கர வண்டி வந்தது.. இங்கு சிவன் கோவில் எங்கே இருக்கிறது என்று கேட்ட படி
வாகனம் நின்றது..
உடனே அந்த பையன் தெருவில் கடைசி திருப்பிய உடன் வரும் என்றான்..
அவரும் நன்றி தம்பி என்றவாரே வண்டியை ஓட்டிச் சென்றார்..
அந்த பையனும் அவன் தோழனும் பேசி கொண்டே பள்ளியில்
நுழைந்தனர்.பள்ளியின் நுழைவு வாயிலில் ஒரு சிறிய நாய் குட்டி
அடிப்பட்டு கத்தி கொண்டே இருந்தது..
யாருமே கவனிக்க வில்லை.... அந்த சின்ன வயதில் எத்துணை அறிவு ..
தன் கைகுட்டையை அந்த நாய் காலில் கட்டி அந்த நாயை தூக்கி கொண்டு வேகமாக பக்கத்தில் இருந்த அரசு மருத்துவ மனையில்
சேர்த்து சிகிச்சை செய்ய அந்த நாயோ தன் வாலை ஆட்டி நன்றி தெரிவித்தது.. இதை பார்த்த அந்த பையனின் வகுப்பு தோழன் அவனை பாராட்டினான்.நானும் இனி உன்னை போலவே இருப்பேன்.. மனதில் நேயம் வேண்டும்..
வாயில்லா உயிரையும் நேசிப்போம்...
ஒன்றை பிறருக்கு கற்று கொடுக்கும் முன் நம் செயலால் கற்று கொடுக்க
முயல்வோம்.......