கண்ணோடு இமையாக

உன்னோடு நானாக வேண்டுமடி..
கண்ணோடு இமையாக வேண்டுமடி.
நினைவோடு நீயே தானடி...

ஒயிலாக ஒய்யாரம வருவா...
மயிலாக அழகா தெரிவா..

புத்துயிர் புற்றெடுத்து அதில் காதல்
சேர்த்து அன்பே

துன்பமுற்று இன்பமுற்று நூற்றாண்டு வாழ வேண்டுமடி ஓர்கூட்டில்..

தென்கரை நாட்டு பேரழகி உன்னை வர்ணிக்க வார்த்தை தேடியே வாழ வேண்டுமடி
எந்தன் ஆயுள்ஆண்டில்..

விடிய விடிய பல கதைகள்
பேசி பேசி விழித்திருப்பேன்
உந்தன்மடியில்...

ஆசைகள் பல கிடக்கு கடல்போல
அவை யெல்லாம் புதைந்து கிடக்கு
புதையல்போல நெஞ்சில்...

மனமார காதல் செய்கிறேன் உன்னை. உளமாற உறுதியளிக்கிறேன்
உண்மையில்...

எழுதியவர் : BARATHRAJ M (4-Sep-21, 3:34 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 990

மேலே