ஆசையடி
உன் வீட்டுச்சுவற்றில்
கண்ணாடியாய்
இருந்திட ஆசையடி..
தினமும் நீ பார்க்கும்
வேளையில்
கண்ணிமைக்காது
உன் அழகைப்
பார்த்து ரசித்திருக்க...
உன் விரல்களில் நகங்களாய்
மாறிவிட ஆசையடி
உன் இதழ்களுக்கிடையில்
சிக்கித்தவித்திட...
நீ அணியும் முகக்கவசமாய்
மாறிவிட ஆசையடி...
பாப்பாத்தி
பட்டுப்பூச்சிபோல்
மென்மையான
உன் கன்னத்தை
தழுவியபடி...😊
உன் கைவிரல்
மோதிரமாய் மாறிவிட
ஆசையடி..
ஆண்டு முழுவதும்
உன் விரல்களை பிடித்தபடி
பயனிக்க....
நீ எழுதும் பேனாவாக
மாறிவிட ஆசையடி...
நீ சிந்திக்கும்போது
உன் கன்னம் தொட்டு
நெற்றியில் முத்தமிட்டு
வாழ்ந்திட.....
நீ எழுதும் பேனாவாக
மாறிவிட ஆசையடி...
நீ எழுதும்போது
உன் விரல்களுக்கிடையிலும்
சிந்திக்கும்போது
உன் இதழ்களுக்கிடையிலும் சிக்கித்தவித்திட....
நீ செல்லும் கோவிலின்
வாயிற்படியாய்
வாழ்ந்திட ஆசையடி...
உன் பாதம் தொட்டு
முத்தமிட...
நீ முகம் பார்க்கும்
கண்ணாடியாய்
மாறிவிட ஆசையடி..
உன் முகத்தின்
குறும்பு செய்கைகளை
ரசித்திருக்க....
உன் சுவாசக்காற்றாய்
மாறிவிட ஆசையடி..
என் இதயத்தின்
அருகே சென்று வர....
உன் விழியின்
இமையாய் இருந்திட
ஆசையடி..
உறங்கும்போதும்
உன் விழியை ரசித்தபடி
காத்துநிற்க...
உன் கூந்தலில்
ஒற்றை தலைமுடியாய்
வாழ்திட ஆசையடி..
உன் கன்னம்
வருடியபடி😍
காற்றாக மாறிவிட
ஆசையடி...
உன் மூச்சுக்காற்றோடு
நீ இருக்குமிடமெல்லாம்
உன்னை வருடியபடி
உன்னைச்சுற்றி
வாழ்ந்திருக்க.......
தொடரும்.....
இரா.தினேஸ்குமார்