பிழையாய் இதுவரை
பதறாது நிலையாய் ஓரிடத்தே இருந்து
கதிரவன் உதிர்ந்த துகளாம் கோள்கள்
சிதைவால் தோன்றி தனியாய் சுழன்று
கதிரவன் உதிரும் கதிரில் இயங்கும்
பெரியதாய் சிறியதாய் வடிவில் இருக்கும்
பருமனில் குறைந்த கூடிய கோள்களில்
அரிய கோளாம் பூமியில் உயிர்கள்
உருவாகி பெருகி வளர்ந்து வாழும்
நிலையால் உயிரின் கோளமாய் இருக்கும்
தலைமைக் கோளில் தழைத்த எதுவும்
கலையின் வடிவில் சிறந்து விளங்க
அலையாய் கதிரைக் கொடுக்கும் கதிரவன்
பிழையாய் இதுவரை எதையும் செய்யாது
மழையைக் காற்றை வள்ளலாய் தந்தே
இழையால் கட்டிய அரும்பினைப் போன்றே
அழகாய் காக்கும் ஞாயிறைப் போற்றுவோம்
----- நன்னாடன்.