அன்னை…
அகிலத்தின் அளவில்
உன் அன்பு
அதைவிட அதிகம்தான்….!!
என்னைச்
சுமந்த
உயிரே…..உன்னையும்
உன்
பாசத்தையும்
உயிருள்ளவரை
சுமப்பேன்…..!!
தலை மகன்
ஆனாலும்
தகாதவன்
ஆனாலும்
உன் அன்பு
தரம் குறைவதில்லை…..!!
பசி
அறியும் பக்குவம்
நோய்
தீர்க்கும் மருத்துவம்
எல்லாமே
உனக்குள்….அறிந்து
வைத்தாய்
ஆதலால்
நீ….தாய்……!!