நலம்விற் றுணவுகொளும் பொற்றொடி நல்லார் நனிநல்லர் - நீதிநெறி விளக்கம் 83

இன்னிசை வெண்பா

கற்பில் மகளின் நலம்விற் றுணவுகொளும்
பொற்றொடி நல்லார் நனிநல்லர் - மற்றுத்தம்
கேள்வர்க்கும் ஏதிலர்க்கும் தங்கட்கும் தங்கிளைஞர்
யாவர்க்கும் கேடுசூ ழார் 83

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

தமது இன்பத்தைப் பிறர்க்கு விற்று உண்டு பிழைக்கும் பொன்வளை யணிந்த பொதுமகளிர் கற்பிலாத பெண்களினும் மிகவும் சிறந்தவர்களாவர். ஏனெனில், தம்மேல் அன்புடைய கணவர்க்கும், பிறர்க்கும், தங்கட்கும், தம் சுற்றத்தார் அனைவருக்கும் அவ் விலைமகளிர் கேடு செய்ய நினையார்.

விளக்கம்:

பொதுமகளிர் கேடு சூழார் என்றமையின், கற்பிலாக் குலமகளிரால் இத்தனை கேடுகளும் வரும் என்பது சொல்லாமலே விளங்கும்.

கருத்து:

கற்பிலாப் பெண்களினும் பொது மகளிர் நல்லவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Apr-22, 5:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே