உயிராகிப் போனவள்
எனை தீண்டிய தென்றல் !
----------'
தென்திசைப் புயலொன்று தென்றலென மாறியதே !
என்மீதில் இதமாக எங்கெங்கோ மோதியதே !
ஊனோடும் உயிரோடும் ஒன்றாக இணைந்ததுவே /
தேனாகித் தெவிட்டாதத் தெள்ளமுதாய்த் தித்திக்குதே!
சஞ்சரிக்கும் கோள்களிந்த சம்பவத்தைச் செய்தனவோ /
மஞ்சத்திலே மன்மதனால் மகிழ்ச்சியெலாம் பெய்ததுவோ!
துயரங்கள் மோதுகையில் துணையாகி நின்றாளே/
அயராத அரவணைப்பால் அன்னையென உயர்ந்தாளே!
இளமாலை நேரத்தே இளையவனைத் தீண்டியவள்/
உளமெல்லாம் நிறைந்தாளே உயிராகிப் போனாளே !
-யாதுமறியான்.

