வெறுமையானேன்

உன் விழியோர மையெடுத்து
எழுதிவிட்டேன் காவியங்களை..
உன் இதழோர தேனெடுத்து
படைத்துவிட்டேன் விருந்துகளை..
உன் கால்கொலுசு இசையெடுத்து
பாடிவிட்டேன் ராகங்களை..
உன் இடையாடும் நாட்டியங்களில்
கண்டெடுத்தேன் நர்த்தனங்களை...
எல்லாம் உன்னிலிருந்து எடுத்தவைதான்
என்சுயம் இழந்து வெறுமையானேன்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (15-May-22, 7:08 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 112

மேலே