கற்றறிந்தார் துஞ்சார் படைப்பட்ட நாயகனே போன்று – அறநெறிச்சாரம் 115

நேரிசை வெண்பா

தோற்றமும் சம்பிரதம்; துப்புரவுஞ் சம்பிரதம்;
கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம்; - தோற்றம்
கடைப்பட்ட வாறறிந்து கற்றறிந்தார் துஞ்சார்
படைப்பட்ட நாயகனே போன்று 115

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

பிறப்பும் வினைமுறை, பிறந்த உயிர் உலகப் பொருள்களை அனுபவித்தலும் வினைமுறை; உலகில் வாழும் உயிர்களை எமன் கவர்ந்து போவதும் வினைமுறை;

ஆதலால், அற நூல்களைக் கற்று உணர்ந்தவர்கள் பிறப்பின் இழிவையறிந்து, போர் முனையை அடைந்த சேனாதிபதியே போலச் சோர்வில்லாமல் பிறப்பினை யறுக்க முயல்வர்.

formality: சட்ட விதிமுறை ஒழுங்கு, சம்பிரதாயம், மரபொழுங்கு, ஆசாரம், வினைமுறை, சடங்கு, நவநாகரிக முறை, புற ஆசாரத்தன்மை, மரச்சட்டம் போன்ற பண்பு.
.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-May-22, 10:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே