கலைவிழியாள் கையில் விசிறியாவாய்

படிப்பறியா பாமரன் குடிசைக்கு கூரையாவாய்
படித்த புலவன் எழுதிட ஏடாவாய்
நெடிய மரத்தோலை யேவிரிக்கப் பாயாவாய்
முடைந்தால் அழகான ஓலைக் கூடையாவாய் !

----கலிவிருத்தம்
சில யாப்புக் குறிப்புகள் :
படி படி நெடி ஒரே எதுகை முடை வர்க்க எதுகை
கூடையாவாய்
நேர் நிரை நேர் ----கூவிளங்காய் டை சீரின் முதலில் வர நெடில் இடையில் வர
குறில்
முதலடியில் முற்று மோனை ( ப பா கு கூ ) அமைந்திருக்கிறது

படிப்பறியா தோன்குடி சைக்குக்கூ ரைநீ
படித்த புலவன் எழுதிடும்ஏ டும்நீ
நெடிய மரத்தோலை யேவிரிக்கப் பாய்நீ
முடைந்திடின் கூடையும் நீ

---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

கலைவிழியாள் கையில் விசிறியா வாய்பின்
பெருமை யுடன்சுழல் வாய்

-----குறள்வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jul-22, 6:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே