கலைவிழியாள் கையில் விசிறியாவாய்
படிப்பறியா பாமரன் குடிசைக்கு கூரையாவாய்
படித்த புலவன் எழுதிட ஏடாவாய்
நெடிய மரத்தோலை யேவிரிக்கப் பாயாவாய்
முடைந்தால் அழகான ஓலைக் கூடையாவாய் !
----கலிவிருத்தம்
சில யாப்புக் குறிப்புகள் :
படி படி நெடி ஒரே எதுகை முடை வர்க்க எதுகை
கூடையாவாய்
நேர் நிரை நேர் ----கூவிளங்காய் டை சீரின் முதலில் வர நெடில் இடையில் வர
குறில்
முதலடியில் முற்று மோனை ( ப பா கு கூ ) அமைந்திருக்கிறது
படிப்பறியா தோன்குடி சைக்குக்கூ ரைநீ
படித்த புலவன் எழுதிடும்ஏ டும்நீ
நெடிய மரத்தோலை யேவிரிக்கப் பாய்நீ
முடைந்திடின் கூடையும் நீ
---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
கலைவிழியாள் கையில் விசிறியா வாய்பின்
பெருமை யுடன்சுழல் வாய்
-----குறள்வெண்பா