இறைவன் அவதாரம்

தெரியாது பிழை செய்தால் மன்னிப்பே
தெரிந்தே பிழை செய்தால் கண்டிப்பு
தொடர்ந்து தெரிந்தே பிழை செய்யின்
தண்டனைத் தவிர வேறு உபாயமில்லை
இருந்தும் வேணுமென்றே பிழைகள்
செய்துவிட்டு ஒவ்வோர் முறையும் இறைவனிடம்
மன்னிப்பு கேட்பதில் நியாயமும் உண்டா
சொல்மனமே ........பாவிகளை தண்டிக்கவே
இறைவன் விண்ணிலிருந்து மண்ணில்
வந்து அவதரி கின்றான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jul-22, 9:55 am)
Tanglish : iraivan avatharam
பார்வை : 211

மேலே