கடிதம்

கடிதம்.
(கடிதம் அல்ல ❤️)

ஒற்றை அடி
பாதையிலே!
ஓரமாக நான்
ஒதுங்கி நிற்க,
ஓரக் கண்ணாலே
பார்த்து
செல்பவளே!
என் கடிதமதை
படித்துவிடு.

உன் ஒய்யார
நடை அழகு
என் கண்மணியில்
ஆடுதடி,
உன் பவளப் சிரிப்பு
என்னை பயித்தியம்
ஆக்குதடி.

ஒருநாள்,
சேவலாக மாறி!
உன் கூரையிலே
ஏறி நின்று
கூவிடுவேன்டி!
உன் தூக்கத்தையும்
கலைத்திடுவேன்டி!

எழுந்து வந்து
என் மோகத்தை
தணிப்பாயோ?
இல்லை!
கல் எடுத்து தான் என்னை
அடித்திடுவாயோ?

PS:
காத்திருப்பேன்
உனக்காக
ஒற்றை அடி
பாதையிலே!

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (30-Jul-22, 10:58 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kaditham
பார்வை : 93

மேலே