ஞானேந் திரியங்கள் நன்றாய் உரைக்கக்கேள் - உண்மை விளக்கம் 11
திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா
ஞானேந் திரியங்கள் நன்றாய் உரைக்கக்கேள்
ஊன மிகுபூதம் உற்றிடமா – ஈனமாம்
சத்தாதி யையறியும் தானம் செவிதோல்கண்
அத்தாலு மூக்கென் றறி. 11
- உண்மை விளக்கம்
பொழிப்புரை:
ஞானேந்தியங்களை நன்றாகச் சொல்லுகிறோங் கேள், குறைவு பொருந்தி மிகுகின்ற பஞ்சபூதங்களிடமாக நின்று, அவை தாழ்வாகிய சத்தாதி விடயங்களை அறியும், அவற்றிற்குத் தானம் சுரோத்திரம் துவக்கு சட்சு அந்தச் சிகுவை ஆக்கிராணமென்று அறிவாய்.