நிந்திக்க மனமில்லை

நண்பன்
யாரடா
எதிரி
யாரடா
புரியாத
நிலையடா !
நண்பனும்
எதிரியாய்
எதிரியும்
நண்பனாய்
மாறுகின்ற
காலமடா !
விந்தைகள்
நடக்கிறது
வினோதங்கள்
நிகழ்கிறது
வியப்பு
கூடுகிறது !
சந்தையாய்
மாறிவிட்ட
சமுதாயம்
நஞ்சானது
வஞ்சகம்
நிறைந்தது !
அருகிலிருந்தோர்
மறப்பதும்
தள்ளியிருந்தோர்
நினைப்பதும்
நவீனத்தின்
விளைவுகளா ?
விரிசல்கள்
இல்லாமலே
இடைவெளி
உருவாக்கி
ஒதுங்கியோர்
ஓராயிரம் !
பலன் பெறவே
நெருக்கமாக
இருந்தோரை
தேடுகிறேன்
காணவில்லை
இன்றுவரை !
சிரித்துப்
பழகியவர்கள்
சிந்திக்க
வைத்தனர்
நிந்திக்க
மனமில்லை !
நினைவுகள் சில
நீர்த்து உலர்ந்தது
மறைந்து மறந்தது !
ஒற்றை படகாய்
ஒதுங்கி நிற்கிறேன்
ஓய்வில் இருக்கிறேன் !
பழனி குமார்
24.08.2022